ஊரடங்குச் சட்டத்தை மீறிய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

🕔 April 12, 2020

ரடங்குச் சட்டத்தை மீறிய 23,500 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையான காலப்பகுதி வரையில் இவர்கள் கைதாகினர்.

இந்த காலப்பகுதியில் 6,500 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு , கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் வியாழக்கிழமை 16ஆம் திகதி காலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்