அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தையும் சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி

🕔 March 28, 2020
குறித்த பகுதியை முடக்கும் அறிவிப்பை ஒட்டிய போது…

ட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட நபரின் தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் குறித்த இருவருக்கும் காணப்பட்டுள்ளன. இதனால் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் மூலம் களுத்துறை – நாகொடை வைத்தியசாலைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துபாய் நாட்டில் இரண்டு நாட்கள் கழித்து விட்டு கடந்த 19ஆம் திகதி இலங்கை வந்த – அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், கடந்த 06 நாட்களாக அந்தப் பிரதேசத்தின் பல இடங்களுக்கும்சென்றுள்ளார்.

அந்த நபர் – பலருடன் நெருக்கமாக பழகியதாக தெரியவந்துள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த பகுதியை பாதுகாப்பு படையினர் முடக்கினர்.

இந்த நபர் நேற்றைய தினம் அம்பியுலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரின் தந்தையும் சகோதரியுமே இன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்