முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலரை கைது செய்யுமாறு ஆலோசனை

🕔 March 3, 2020

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் சரத்சந்திர உள்ளிட்ட சிலரை நீதிமன்றின் ஊடாக பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்களை கைது செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பணிப்புரையினை பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்