பதவிக்காக கட்சியை பிளவுபடுத்தப் போவதில்லை: சஜித் பிரேமதாஸ
பதவி, பொறுப்பு, அந்தஸ்துக்காக போராடி கட்சியை பிளவுப்படுத்தப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பதவிகளை விட மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரத்மலானையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“பெரும்பாலும் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடிய சாத்தியம் உள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை கருத்திற் கொண்டும்இ என்னால் முடிந்த சகல அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள தயாராகி வருகிறேன்.
பதவி, பொறுப்பு, அந்தஸ்துக்காக போராடி கட்சியை பிளவுப்படுத்த போவதில்லை.
பதவிகளுக்கு மேலாக மக்களின் ஆதரவும் வரவேற்புமே முக்கியம்” என்றார்.