இறந்தது சஹ்ரான்தான்; டீ.என்.ஏ. ஆய்வில் உறுதி

🕔 May 21, 2019

கொழும்பு – ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம்jதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மூன்று கிறிஸ்தவ தேவாலங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதில் கொழும்பிலுள்ள ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் இருவர் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.

அவ்வாறு தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்