45 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

🕔 October 26, 2018

ஹெரோயின் போதைப் பொருளை – குளிசை வடிவில் விழுங்கிக் கொண்டு வந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் இருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 350 கிராம் எடையுடைய 35 ஹெரோயின் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 67 வயதுடைய பெண், மற்றையவர் 44 வயதுடைய ஆண் ஆவார்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதை மாத்திரைகளின் பெறுமதி 45 லட்சம் ரூபா என, போதைப் பொருள் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்