ஆயிரக்கணக்கான முகப் பூச்சு கிறீம்கள், புறக்கோட்டையில் சிக்கின

🕔 April 3, 2017
புறக்கோட்டையில் அமைந்துள்ள இரண்டு வர்த்தகக் கடைகளில் 11 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியுள்ள சுமார் 3800 மேற்பட்ட முகத்துக்கு பூசும் கிறீம்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை கைப்பற்றினர்.

இந்த கிறீம்களை கொண்டிருந்த டியுப்களில் விலைகளோ, காலாவதியாகும் திகதியோ, உற்பத்தி செய்யப்பட்ட திகதியோ, வியாபார பதிவிலக்கமோ குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில், அவை விற்பனை செய்யப்பட்டு வந்ததமையினாலேயே, அவற்றினைக் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு வர்த்தக நிலையத்தில் 2500 கிறீம் டியுப்களும் இன்னொரு வர்த்தக நிலையத்தில் 1500 கிறீம் டியுப்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தார்கள்.

வர்த்தகர்களை விசாரணை செய்த போது, டியுப் ஒன்று 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிய வந்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் 2003ம் ஆண்டின் 09ம் இலக்க சட்ட விதிகளின்படியே, இந்த பொருட்கள் கைப்பற்றப் பட்டன.

இந்த வர்த்தக நிலையங்களின் வியாபார உரிமையாளர்கள்  நாளை 04ம் திகதி மாளிகாவத்தை நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அதிகாரசபை தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்