ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர்
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது.
இந்தப் பரீட்சையில் 03 லட்சத்து 50 ஆயிரத்து 701 மாணவர்கள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவர்களில் 421 மாணவர்கள் விசேட தேவையுடையோர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 2959 பரீட்சை மண்டபங்களில், மேற்படி பரீட்சை நடைபெறுகிறது. இதற்காக, 28 ஆயிரம் பேர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, பரீட்சை தொடர்பான ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின், அவற்றை 1911 அல்லது பொலிஸ் அவசர முறைப்பாட்டு இலக்கமான 119 அல்லது 0112784208 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும். மேலும், 0112784537 என்ற இலக்கங்களுக்கு அடைத்தும் முறையிடமுடியும் என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.