இரத்தினபுரி மாவட்டத்தில் நில அதிர்வு

🕔 March 6, 2016

Earthquake wave - 01– க. கிஷாந்தன் –

ரத்தினபுரி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறிய அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 3.15 மணியளவிலும், மதியம் 2.15 மணியளவிலும் இந்த அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நில அதிர்வு தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசாரணைகளைத் தொடக்கியுள்ளது.

பலாங்கொடை நகரை மையமாக கொண்டு  இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பல்லேகலையில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மையத்தின் கட்டமைப்பில், சிறிய அளவிலான அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க ஆழப்படுத்தல் பணியகம் கூறியுள்ளது.

எனினும் இந்த நில அதிர்வு காரணமாக எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்