கடூழிய சிறைக் கைதியாகளுக்கான சட்டம்தான், ஞானசாரருக்கும் பின்பற்றப்படும்

🕔 June 15, 2018

டூழிய சிறைக் கைதிகளுக்கான சட்ட விதிமுறைகள்தான், கலகொட அத்தே ஞானசார தேரர் விடயத்திலும் பின்பற்றப்படும் என்று, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறு மாதங்களைக் கொண்ட இரண்டு சிறைத் தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையில் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து  அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி அறிவித்தது.

சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ள ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று மாலை அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஏனைய கைதிகளுக்கான ஆடையினையே ஞானசார தேரரும் அணிய நேரிடும் என்றும், விசேட பாதுகாப்பு அவசியமாயின் அதனை வழங்க முடியும் எனவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்