ஹக்கீமின் அமைச்சினைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம்: கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு
– அஸ்ரப் ஏ சமத் –
ரஊப் ஹக்கீமின் கீழுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினை சுற்றி வளைத்து, இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
மேல் மாகாணத்தில் சேவையாற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அரசாங்கம் அனுமதித்திருந்த சம்பள உயர்வான 25 வீத்தினை, உடன் அமுலாக்கி 2015ஆம் ஆண்டிலிருந்து உடனடியாக வழங்கும்படி இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததோடு, கலகம் அடக்கும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்குள் சம்பள அதிகரிப்பு வழங்கப்படாது விட்டால், நாளை மறுதினம் 13ஆயிரம் ஊழியர்களை ஒன்றினைத்து ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.