அஷ்ரப் எழுதிய ‘உறங்காத உண்மைகள்’ சாய்ந்தமருதில் வெளியீடு
– எம்.வை. அமீர், யூ.கே. காலிதீன் –
கலாசார உத்தியோகத்தர் சாய்ந்தமருது எம்.ஐ.எம். அஷ்ரப் எழுதிய ‘உறங்காத உண்மைகள்’ எனும் நூல், இன்று ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டேல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தைச் சேர்ந்த டொக்டர் நாகூர் ஆரீப், எழுத்தாளர் உமா வரதராஜன், கவிஞர் சோலைக்கிளி, ஆசுகவி அன்புடீன், பாஏந்தல் பாலமுனை பாறூக் உள்ளிட்டோரும், இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வில் நாகூர் நஹீம் வரவேற்புரையையும், ஊடகவியலாளர் ஜெஸ்மி எம்.மூஸார நூல் நயவுரையையும் நிகழ்த்தினர்.
நூலின் முதல் பிரதியை தொழிலதிபர் ஏ.எம்.எம். தஸ்லீம் பெற்றுக்கொண்டார்.