உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நிமல் லான்ஸா ராஜிநாமா

🕔 December 19, 2017

ள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லான்ஸா, தனது அமைச்சுப் பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவானார்.

தனது ராஜிநாமா கடிதத்தினை ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று செவ்வாய்கிழமை நிமல் லான்ஸா அனுப்பி வைத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக நிமல் லான்ஸா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பல்வேறு காரணங்களின் நிமித்தம் தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்ததாகத் தெரிவித்துள்ள நிமல் லான்ஸா; அது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் விரைவில் தெரியப்படுத்துவேன் என்றார்.

எவ்வாறாயினும், தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கே தான் ஆதரவளிக்கப் போவதாவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்