களுகங்கையில் உவர்நீர் கலப்பதைத் தடுக்க, 08 பில்லியன் ரூபாய் ஒதுக்கினார் ஹக்கீம் 0
– பர்ஸான் – களுத்துறை மாவட்டத்திலுள்ள களுகங்கையில் உப்புநீர் கலப்பதை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது அமைச்சிலிருந்து 8.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார். குடிநீர் பிரச்சினைகள் சம்பந்தமாக நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.