சிலரைத் திருப்திப் படுத்துவதற்காக, வடக்கு கிழக்கை இணைக்க முடியாது: அமைச்சர் றிசாட் 0
– சுஐப் எம் காசிம் – வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் அங்கு வாழும் ஒரு சாரார் இணைப்பை விரும்பாவிட்டால் பலாத்காரமாக அதனை ஒருபோதும் செய்ய அனுமதிக்க முடியாது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வெறுமனே சுயநலத்துக்காகவோ, சிலரைத் திருப்திப் படுத்துவதற்காகவோ சந்தர்ப்பவாதத்துக்காகவோ மேற்கொள்ளும் அரசியலானது, சமூகத்துக்கு