இரு மணி நேரத்தில் கடவுச் சீட்டு: முறைமை அறிமுகம்
கடவுச்சீட்டை ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய இதனைக் கூறினார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு, சிலர் கடவுச்சீட்டுக்களை வழங்கி வரும் மோசடிகள் தொடர்பில் – அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
பின்னர் இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், ஒருநாள் சேவையின் கீழ் இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹர்ச இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.