மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்க மறியல்: கருத்தடை மாத்திரையால் விடயம் அம்பலம்

🕔 December 2, 2022

மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

24 வயதுடைய சந்தேக நபர் – தங்கொடுவ, வென்னபுவ மற்றும் மகும்புர உள்ளிட்ட பல பிரதேசங்களில் விஞ்ஞான பாடத்தை தனியார் வகுப்புகளில் நடத்தி வந்துள்ளார்.

துஷ்பிரயோகத்துக்கு ஆளான தரம் 10 வகுப்பு மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளனர்.

சந்தேக நபர், தனியார் வகுப்பு மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவின் ஊடாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் இலக்கத்தை பெற்று, அவருடன் தொடர்பை ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பன்னிபிட்டியவில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் – சந்தேக நபர் வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரும் பாதிக்கப்பட்ட நபரும் காதலித்துள்ளதாகவும், எனவே பிணை வழங்குமாறும் அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இருந்தபோதிலும், சந்தேகநபரை விளக்கமறியலில் வைத்த நீதிமன்றம், வகுப்பில் உள்ள மற்ற மாணவிகளிடம் விசாரணை நடத்தி, கண்டறிந்த உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்