உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின் வெட்டு, கட்டண உயர்வு ஆகியவற்றை நிறுத்துவது தொடர்பில் ஆராய்வு

🕔 December 1, 2022

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராய்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (01) தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி நடுப்பகுதி வரை நடத்தப்பட உள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியமைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் இந்த விடயத்தை முன்வைத்து, மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்