கடும் நிபந்தனைகளுடன் தனுஷ்கவுக்கு பிணை

🕔 November 17, 2022

பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட இலங்கை கிறிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இதற்கிணங்க பிணைத் தொகையாக 150,000 அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் சுமார் 03 கோடி 71 லட்சம் ரூபா) செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தினமும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும், இரவு 9 மணி தொடக்கம் காலை 6 மணி வரை வெளியே செல்லக் கூடாது, புகாரளித்தவரைத் தொடர்பு கொள்ளக் கூடாது, டிண்டர் மற்றும் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது போன்றவை நீதிமன்றம் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளாகும்.

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை அவரின் விருப்பத்துக்கு மாறாக புணர்ந்தமை உட்பட, பாலியல் ரீதியான 4 குற்றச்சாட்டுகள் தனுஷ்க மீது சுமத்தப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: ‘அவசரப்பட வேண்டாம்’ என்ற போதும், பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டார்: கிறிக்கெட் வீரர் தனுஷ்க மீது, அவுஸ்ரேலிய பெண் குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்