நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை
நாடாளுமன்றத்தை கூடிய விரைவில் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இவ்வாறு நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கேட்டுள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலை குறித்து மாத்திரம் பேசுவதற்கு மாத்திரம் சபாநாயகர் சபையைக் கூட்டுவதற்கு ஏற்பாடுகள் உள்ளதாக ஆயுதப் படைகளின் சார்ஜென்ட் நரேந்த பெர்னாண்டோ ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.