அமைச்சர்களுக்கு இனி ஹெலிகொப்டர் இல்லை: விமானப்படை தெரிவிப்பு

🕔 March 26, 2022

பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர் பயணம் அல்லது உள்நாட்டு விமான சேவைகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி மற்றும் பல காரணிகளை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பணம் செலுத்தி ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்யும் பொது மக்களுக்கு வழங்கப்படும் வசதியை கட்டுப்படுத்தவும் விமானப்படை முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்