சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கையர்: வரலாற்றில் இடம்பிடித்தார் சாணக்கியன்
சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் ‘காலநிலை மாற்றம்’ குறித்த மாநாட்டில் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையினை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் பெற்றுள்ளார்
இந்தோனோஷியாவின் பாலியில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் குறித்த அமர்வில் காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) மாநாடு ஒன்று நடைபெற்றிருந்தது.
சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் 178 உறுப்பு நாடுகள் உள்ளன. இலங்கையிலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் பேச்சாளராக கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதன்போது அங்கு அவர் கருத்து வெளியிடுகையில்;
“இலங்கையில் சுற்றுசூழலினை அரசாங்கமே அழிக்கின்றது.
அப்படியான நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கிளஸ்கோ மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் இலங்கையில் 100 சதவீதம் நடைமுறையில் இல்லை. அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதனை சர்வதேச நாடுகள் கண்காணிக்க வேண்டும்” என்றார்.
(நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊடகப் பிரிவு)