சமையல் எரிவாயு சிலிண்டர்கள், நுகர்வோர் அதிகார சபை அம்பாறை மாவட்ட காரியாலயத்தினால் நியாய விலையில் பகிர்ந்தளிப்பு

🕔 March 22, 2022

நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் – பொலிஸாருடன் இணைந்து, பொதுமக்களுக்கான லிட்றோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் நிகழ்வினை இன்று செவ்வாய்க்கிழமை (22) அம்பாறை கச்சேரி முன்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்றோ எரிவாயு சிலின்டர் ஒன்று 2785 ரூபாவுக்கு வழங்கப்பட்டது.

நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிய பண்டார நவரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 150 க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவற்றினைப் பெற்றுக் கொண்ட மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்