டானிஸ் அலியை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
விமானத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட கோட்டா கோ கம செயற்பாட்டாளர் டானிஸ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் நேற்று துபாய் செல்லும் விமானத்தி்ல் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
ரூபாவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குள் பிரவேசித்து அதன் நிகழ்ச்சிக்கு இடையூறை விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்ற ஆணையின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.