முகக் கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு வலியுத்தல்
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போதும், மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 10ஆம் திகதி முதல் – வீட்டுக்குள்ளும் வெளியிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என அரசு அறிவித்தது.
இருப்பினும், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முகமூடிகளை அணியவும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும் அப்போது கேள்டுக் கொள்ளப்பட்டனர்.