பசில் ராஜபக்ஷவின் இரண்டு முன்மொழிவுகளை இடைநிறுத்த தீர்மானம்

🕔 June 5, 2022

சில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளன.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த யோசனைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4,917 உள்ளூராட்சி சபைகளுக்கு தலா 04 மில்லியன் ரூபாய் வீதம் மொத்தம் 19.67 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புற சமூக மேம்பாட்டுக்கென அவர் ஒதுக்கிய 85 பில்லியன் ரூபா நிதியும் நிறுத்தப்படவுள்ளது.

தற்போது பெரும் சுமையாகக் காணப்படும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட நாட்டின் பொதுத்துறை முழுவதிலுள்ள சாத்தியமான செலவுகளைக் குறைப்பதற்கான மீளாய்வுகளைச் செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்