மலையகத்தில் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

🕔 August 12, 2021

– க. கிஷாந்தன்

த்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது.

நேற்று இரவு முதல் – நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

இதனால் மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும், கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகளும் இன்று (12) காலை திறக்கப்பட்டன.

காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இன்று காலை 70 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளது.

இதே வேளை நோர்ட்டன் பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப் பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால், அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான் பாய்கின்றன.

எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ், தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்கள் தற்போது நிறைந்து காணப்படுவதனால், உச்ச அளவில் மின் உற்பத்தி நடைபெறுவதாக மின்சாரசபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்