மினுவாங்கொட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; பிக்குவின் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது: ஆணைக்குழுவில் சாட்சியம்

🕔 December 3, 2020

– எம்.எப்.எம். பஸீர் –

ஸ்டர் தின தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு அடித்தளமிட்டதாக நம்பப்படும் சம்பவம், பொய்யான விடயம் ஒன்றினை மையப்படுத்தியதென, அந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக கூறப்படும் இளம் பெளத்த பிக்கு (பயில் நிலை ) ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியமளித்தார்.

மினுவாங்கொட வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் முன்வைத்த சாட்சியங்களைத் தொடர்ந்து, இவ்வாறு குறித்த பிக்கு ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைச் செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியமளித்தார்.

அவரது சாட்சியத்தின் ஊடாக விசாரணை அதிகாரிகளின் சாட்சியம் மேலும் உறுதியானது.

“என்னை தாக்கியதாக தெரிவிக்குமாறு, விகாரைக்கு வந்த ஜகத் மாமா தெரிவித்தார். அதன் பேரிலேயே நான் அவ்வாறு கூறினேன்” என சாட்சியம் வழங்கும் போது குறித்த இளம் பிக்கு தெரிவித்தார்.

மினுவாங்கொட பொல்வத்தை எனும் கிராமத்தில் அமைந்துள்ள விகாரையில் இருந்த இளம் பிக்கு மீது,  கல்ஒலுவ எனும் முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டிருந்தது.  இதனால் மினுவாங்கொடயில் வன்முறைகள் வெடித்ததாக சாட்சிகள் ஊடாக தெளிவாகின.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்