தெற்கில் நடமாடும் நிர்வாண நபர்கள்; அச்சத்தில் மக்கள்: பொலிஸார் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிப்பு

🕔 June 6, 2020

நிர்வாணமாக இரவு வேளைகளில் நடமாடும் நபர்களால், காலி மாவட்டத்தில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் நிர்வாண நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக நெலுவ மற்றும் ஹினிதும பொலிஸ் பிரதேசங்களில் வீடுகளுக்கு நிர்வாணமாக நுழையும் நபர்கள் அங்குள்ளவர்களை அச்சுறுத்துவதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக திடீர் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்