அரசாங்கத்தின் மூடி மறைப்பும், ரோஹிங்கிய அகதிகள் பிரச்சினையின் பூதாகரமும்

🕔 September 27, 2017

– அ. அஹமட் –

லங்கை இனவாதிகள் மியன்மார் முஸ்லிம்களை விரட்டுவதாக நினைத்து, சர்வதேச ரீதியில் இலங்கையின் நாமத்துக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

கல்கிசை பகுதியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமியன்மார் அகதிகள் மீது நேற்று செவ்வாய்கிழமை இனவாதிகளின் அட்டூழியங்கள் நடந்தேறியுள்ளன. இந்த மியன்மார்அகதிகளுக்கு இலங்கை அரசாங்கம் தங்குவதற்கு அனுமதியளித்ததே தவிர, மற்ற அனைத்தையும் ஐ. நா அமைப்பே முன்னெடுத்து வந்தது.

இலங்கை நாடானது சர்வதேச ரீதியில் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரமே இவர்களை தங்க வைத்துள்ளது. இவர்கள் இங்குள்ள விடயம் மற்றும் இவர்கள் எவ்வாறானவர்கள் என்பதெல்லாம் ஐ.நா.சபை வரை தெரியும். இவர்களை இங்குள்ள இனவாதிகள் அச்சுறுத்தியுள்ளனர்.

இவர்களின் அச்சுறுத்தலின் மூலம் இலங்கை சர்வதேச ரீதியில் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களைமீறியுள்ளது. சர்வதேச சட்டங்களை மதிக்கும் பண்பு இலங்கை மக்களிடத்தில் இல்லை என்பதுதெளிவாகியுள்ளது. இதன் மூலம் இவ்வாட்சியின் மீது சர்வதேசம் கொண்டுள்ள சிறு நம்பிக்கையும் இல்லாது போகலாம். இலங்கை நாடானது யுத்த குற்றச் சாட்டுக்கள் உட்பட பல விடயங்களில் அகப்பட்டிருப்பதால் அவற்றிலிருந்து தப்பிக்க, சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற வேண்டிய தேவையும் உள்ளது.

இவர்கள் இங்கிருக்கும் விடயம் அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும். சட்ட ரீதியான அனுமதிகளுடன்தான் இவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். இனவாதிகளுக்கு பயந்துகொண்டு அரசாங்கமும் அமைச்சர்கள் சிலரும் ரோஹிங்யா அகதிகள் நாட்டில் ஐ.நா.சபை கண்காணிப்பில் தங்கவைக்கப்பட்டிருப்பதை பொதுமக்களுக்கு கூறாமல் மறைந்தார்கள்.

முறையாக இந்த விடயத்தை எடுத்து கூறி இருந்தால், இந்த விடயம் இந்த அளவு பூதாகரமாகியிருக்காது.

அது மட்டுமல்லாமல் இலங்கையில் எந்தவொரு ரோஹிங்யா அகதிகளும் இல்லை என வெளிநாட்டு பிரதி அமைச்சர் கூறிவிட்டு தற்போது அதனை மறுத்தாலும், சிங்கள மக்கள் நம்பவும் மாட்டார்கள். முஸ்லிம் அமைச்சர்களே இவர்களை இங்கு கொண்டு வந்து குடியேற்றியுள்ளதாக கூறிய கதைகளையும் உண்மைப்படுத்தி விடுவார்கள்.

அரசாங்கம் உண்மையை மறைத்ததால்தான் இந்த விடயம் பூதாகரமான பிரச்சினையாகியுள்ளது.

இனவாதிகளின் இச் செயற்பாடானது சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயரை கெடுப்பதோடு, இலங்கையை ஆபத்தான திசை நோக்கியும் திருப்பி விடும் என்பதில் ஐயமில்லை.

இந்த அரசாங்கத்தின் தூரநோக்கற்ற சிந்தனையே அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்