நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு, சட்ட மா அதிபர் கோரிக்கை

🕔 November 13, 2018

னாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர்  ஜயந்த ஜயசூரிய உச்ச நீதிமன்றில் இன்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தை  ஜனாதிபதி கலைத்தமையானது அரசியலமைப்பை மீறும் நடவடிக்கையென தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றில் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தார்.

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானமானது அரசியலமைப்புக்கு அமைவானது எனவும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்