ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ராஜிநாமா
ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவர் கிராமப்புற வீதிகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் ராஜாங்க அமைச்சர் பதவியை வகித்தார்.
இந்த நிலையில் நிமல் லான்சா தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (22) கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜாங்க அமைச்சர் சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சில விடயங்களை முன்வைத்து கடிதமொன்றினை எழுதியிருந்தார்.
தமது அமைச்சில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்பான செய்தி: அமைச்சுக் கடமைகளிலிருந்து விலகி இருக்க நிமல் லான்சா தீர்மானம்: வேலை செய்வதற்கு செயலாளர் தடையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு