கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர், மீண்டும் கோரானாவினால் பாதிப்பு
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.750
குறித்த நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது கடந்த மார்ச் மாதம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் ஒரு மாதகாலம் வரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 17ஆம் திகதி அவர் குணமடைந்து வீடு திரும்பிய போதும், சுயமாக தனிமைப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 30ஆம் திகதி குறித்த நபர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இவருக்கு பீ.சி.ஆர் பரிசோதணை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது குறித்த நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தொற்றாளர் சிருநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.