தனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஒரு தொகையினர் இன்று வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்: ராணுவ தளபதி தெரிவிப்பு

🕔 March 25, 2020

கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 208 பேர் இன்று புதன்கிழமை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்று ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிசிச்சை பெற்றுவந்த சுமார் 313 பேர் வரையில் அவர்களின் வீடுகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படாத நபர்கள் தொடர்பில் இன்று புதன்கிழமை தொடக்கம் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பிரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பொலிஸாருடன் இணைந்து இவ்வாறானவர்களை கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பிரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்ர பாலசூரிய தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்