திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம்: அப்துல்லா மஹ்றூப் வழங்கி வைத்தார்

🕔 August 1, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

திருகோணமலை மாவட்ட பட்டதாரிகளுக்கான பயிலுநர் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது.

தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரிகளு்கான பயிலுநர் நியனம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம் பெற்றது.

மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் 193 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 40 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் பிரதமர் தலைமையில் இடம் பெற்ற தேசிய நியமனம் வழங்கும் நிகழ்வின் போது வழங்கப்பட்டன. மிகுதியான 153 பட்டதாரி பயிலுனர்களுக்கு இன்று வழங்கப்பட்டன.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூப் கலந்து கொண்டு, நியமனக் கடிதங்களை இதன் போது வழங்கி வைத்தார்.

கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சன்திப் சமரசிங்க, முன்னால் மாகாண அமைச்சர் ஆரியவதி கலபதி உட்பட பிரதேச செயலாளர்கள், அரச உயரதிகாரிகள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்