கண்கட்டி விளையாட்டு 0
– முகம்மது தம்பி மரைக்கார் – உத்தேச அரசமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் போன்ற பேச்சுகளால்தான் அரசியல் அரங்கு நிறைந்து போயுள்ளது. ஆனால், மக்களில் பெரும்பான்மையானோர், இவை தொடர்பில் எதுவிதப் புரிதல்களும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். படித்த மட்டத்தவர்களிடம் கூட, இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தெளிவுகளைக்