வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றோரில் 247 பேர் மரணம்: இந்த வருடத்து தகவல் 0
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றவர்களில், இந்த வருடத்தின் இதுவரை காலப் பகுதியில் மட்டும் 247 பேர், பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர் என்று, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 50 பெண்கள் மற்றும் 145 ஆண்கள் இயற்கை மரணம் அடைந்ததாகவும், 06 பெண்களும் 25 ஆண்களும் தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்