கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள் 0
கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ தற்போது அணைந்துள்ளது. இந்த நிலையில், முகாமினைச் சுற்றி 06 கிலோமீற்றர் தூரத்துக்குள் வசித்து வந்தவர்கள் நேற்றிரவு தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆயினும், தற்போது அவர்கள் தமது இடங்களுக்குத் திரும்பி வருகின்றார்கள். இருந்தபோதும், முகாமிலிருந்து 01 கிலோமீற்றர் தொலைவில் இருப்பிடங்களைக் கொண்டவர்களை,