தனியார் காணிகளில், அரச கட்டடங்கள்; திராய்க்கேணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை: சட்டத்தை மீறும் செயலுக்கு யார் பொறுப்பு? 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி கிராமத்தில் அமைந்திருந்த வாசிகசாலைக் கட்டடம், தனிநபர்கள் சிலரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் முறைப்பாடு செய்துள்ளதாக, அச் சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். ‘திராய்க்கேணியில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு: