வரட்சியினால் சுமார் 05 ஆயிரம் பேர் பாதிப்பு 0
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 03 மாவட்டங்களைச் சேர்ந்த 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (06) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 1,542 குடும்பங்களைச் சேர்ந்த 4,982 பேர்