மாட்டு வண்டியில் பயணித்தவர், கனரக வாகனம் மோதி பலி; சம்மாந்துறையில் பரிதாபம் 0
– எம்.வை. அமீர், யூ.எல்.எம். றியாஸ் – மாட்டு வண்டியில் பயணித்த ஒருவர் சம்மாந்துறை – வங்களாவடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பலியானார். கனரக வாகனமொன்று, மாட்டு வண்டியின் பின்னால் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா அப்துல் குத்தூஸ் (72வயது) என்பவரே விபத்தில் மரணமடைந்தவர்