இங்கிலாந்தில் ‘கலக்கும்’, ஹசன் அலியின் பேரன் 0
இங்கிலாந்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவரொருவர், கடந்த 09 தினங்களில் நடைபெற்ற வாசிப்பு திறனூட்டலில் 25,000 எழுத்துக்கள் கொண்ட புத்தகங்களை வாசித்த முதலாவது மாணவன் என்ற பாராட்டைப் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்தின் லூட்டன் பிராந்திய பாடசாலை, மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக வாராந்த கேள்வி பதில்களை, அக்ஸலரேடெர் கணணி முறையில் பதிவு செய்து ஊக்கமளிக்கின்றது.