“நாடு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டமைக்கு இனவாதிகளும், சில மதகுருகளுமே காரணம்”: பொன்மலைக் குடா விவகாரம் தொடர்பில் றிசாட் குற்றச்சாட்டு 0
புல்மோட்டை – அரிசிமலை பிரதேசத்திலுள்ள பொன்மலைக் குடா பகுதியில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனவாத விஸ்தரிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்றில் நேற்று முன்தினம் (04) உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், இனவாத மற்றும் மதவாதப் போக்குகளினாலேயே நாட்டின் பொருளாதாரம் கையேந்தும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்; “இதுவரை காலமும் ஆட்சியமைத்தவர்களும் ஆட்சியமைக்க துடித்தவர்களும், பேரினவாத சிந்தனையோடு இனவாதத்தை