வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி 0
ஹோமாகம மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) காலை கொஸ்கொட இத்தருவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில், துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானவரின்