க.பொ.த. சாதாரணதர பரீட்சை ஆரம்பம்; மழையினூடே சென்றனர் மாணவர்கள் 0
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளது. புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய, நடைபெறும் இந்தப் பரீட்சையானது, எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைவடையும். இதில் சுமார் 07 லட்சம் பரீட்சார்த்திகள் தோன்றுகின்றனர். இதற்காக 65 ஆயிரத்து 524 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, நாடு முழுவதிலும் உள்ள 5669 பரீட்சை நிலயங்கள் இதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன.