அரச பணத்தில், மோசடியாக தொலைபேசி கட்டணம் செலுத்தினார்: கெஹலியவுக்கு எதிராக வழக்கு 0
முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கென்ட ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது. மேற்படி இருவரும் அரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தியதன் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.