புதிய கூட்டுறவுக் கொள்கை மூலம், கிராமப்புற நுகர்வோருக்கு அதிக பலன் கிடைக்கும்: அமைச்சர் றிசாட் 0
புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாகாண கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் மத்திய கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகைில் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.