த.தே. கூட்டமைப்பினர், பதவிகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட நன்மைகளையே பெறுகின்றனர்: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு 0
– பாறுக் ஷிஹான் – இனப்பிரச்சனை தீர்வு, இனப்படுகொலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி, அரசியல் கைதிகள் விடயம் போன்றவற்றில் அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிய அழுத்தம் கொடுக்காததன் காரணமாகவே, புதிய கட்சியொன்றை உருவாக்க வேண்டியேற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தை