தகவறியும் சட்டமூலம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் 0
தகவலறியும் சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நிறைவேறியது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக, இந்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் அடைக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.