ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு, கட்டாரில் தொழில் புரியும் சகோதரர்கள் நிதியுதவி 0
‘ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உதவ முடியுமா? ‘ என்கிற தலைப்பில், டிசம்பர் 25ஆம் திகதி ‘புதிது’ செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது. கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜெஸ்மின், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதையும், அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இதற்காக சுமார் 40 லட்சம் ரூபா பணம்